Connect with us

முக்கிய செய்தி

தேர்தல் குறித்து பிரசுரிக்கப்படும் செய்திகள் தொடர்பில் ஆணைக்குழு எச்சரிக்கை

Published

on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு புறம்பாக வெளியிடப்படும் செய்திகள் குறித்து பொருட்படுத்த வேண்டாமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தியுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், “இன்றைய தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்குப் புறம்பாக பல்வேறு நபர்களும் அமைப்புகளும் தேர்தல் செயன்முறை சம்பந்தமாக அதாவது வாக்கு அடையாளமிடும் விதம், வாக்குகளையும் விருப்புகளையும் எண்ணும் விதம், தேர்தல் சட்டங்களை வலுவாக்கம் செய்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகளும் வேறு நிர்வாகம் சார்ந்த பணிகளும் குறித்து அடிக்கடி தெரிவித்து வரும் கூற்றுக்களும் அபிப்பிராயங்களும் ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.