Connect with us

முக்கிய செய்தி

தேர்தல் முறைபாடுகள் 3000ஆக உயர்வு…!

Published

on

தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்படும் தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று (10) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 183 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரை மொத்தம் 3,406 தேர்தல் முறைப்பாடுகள் வந்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.