Connect with us

உள்நாட்டு செய்தி

மரத்திலிருந்து விழுந்து சிறுவன் பலி..!

Published

on

பசறை பகுதியில் பாக்கு மரத்தில் இருந்து தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த 16 வயதுடைய சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாக்கு மரத்தை வெட்டுவதற்காக குறித்த சிறுவன் பாக்கு மரத்தில் ஏறி நுனிப்பகுதியில் இருந்து மரத்தை வெட்டும் போது தவறி மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதன்போது, சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதனை தொடரந்து, அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *