Connect with us

உலகம்

கென்யா விடுதியில் பயங்கர தீ – 17 மாணவர்கள் உடல் கருகி பலி..!

Published

on

கென்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர்.

கென்யாவின் நெய்ரி நகரில் ஹில்சைட் எண்டர்சா என்ற பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பாடசாலையில் தங்கி இருந்து கல்வி பயிலும் வகையில் மாணவர் விடுதியுள்ளது. இதில் பல மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் நேற்று (5) இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 13 மாணவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், தீயணைப்பு பிரிவினர் பாடசாலை விடுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்து காயமடைந்த மாணவர்களை மீட்டனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *