Connect with us

அரசியல்

நான் தான் ஜனாதிபதி நாமல் உறுதி..!

Published

on

      

 நான் ஜனாதிபதியாவது உறுதி என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஜனாதிபதி வேட்பாளருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மொட்டு கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு சட்டத்தையும் நடைமுறைப்படுத்த இடமளிக்க மாட்டோம்.

மாகாண சபைகளுக்கு எந்த வகையிலும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரச ஊழியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும், சம்பள முரண்பாடுகள் களையப்பட வேண்டுமெனவும் நாமல் கூறியுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *