Connect with us

உலகம்

156 வகையான மாத்திரைகளுக்கு அரச தடை..!

Published

on

காய்ச்சல், உடல் வலி, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி வரும் 156 வகையான மாத்திரைகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதில் பெரசிட்டமோல் உட்பட்ட மாத்திரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடனேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மருந்துகளில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதனை தடை செய்ய மத்திய சுகாதாரத்துறைக்கு முழு உரிமை உள்ளது.

அந்த வகையில் தான் தற்போது இந்தியாவில் நாட்டில் பயன்பாட்டில் உள்ள ஃஎப்டிசி பிரிவை சேர்ந்த 156 ஃபிக்சட் டோஸ் கொம்பினேசன் (Fixed Dose Combination or FDC) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ‘Aceclofenac 50mg + Paracetamol 125mg tablet’, Mefenamic Acid + Paracetamol Injection, Cetirizine HCl + Paracetamol + Phenylephrine HCl, Levocetirizine + Phenylephrine HCl + Paracetamol. Paracetamol + Chlorpheniramine Maleate + Phenyl Propanolamine, and Camylofin Dihydrochloride 25 mg + Paracetamol 300mg உட்பட்ட 156 மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரசிட்டமொல் ((Paracetamol), டிராமடோல்( Tramadol)இ ஃடவ்ரின் (Taurine) மற்றும் கஃபைன் (Caffeine) உள்ளிட்டவற்றின் கலவையில் உள்ள மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *