Connect with us

வானிலை

கொழும்பில் அடைமழை – மக்கள் பெரும் அவதி

Published

on

கடும் மழை காரணமாக கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

காலி வீதி உட்பட கொழும்பின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. வீதிகளில் நீண்ட தூரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *