Connect with us

உள்நாட்டு செய்தி

கட்டுப்பணம் செலுத்துவது இன்று நிறைவு….!

Published

on

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவது இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் மொத்தமாக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை நாளை காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும்.ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *