Connect with us

முக்கிய செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதியின் அறிக்கை..!

Published

on

2025ஆம் ஆண்டு முதல் அன்னிய கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் கார் இல்லாமல் இருக்க முடியாது. வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

கண்டியில்  நேற்றையதினம் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரி உயர்வுகளால் கடினமான காலமாக இருந்தது. இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல நல்ல முறையில் முன்னேறி வருகிறது. முதன்மை வரவு செலவு திட்டத்தினை தேவைக்கு அதிகமாக பராமரிக்க முடிந்தது. எனினும், இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கும் என்று குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *