Connect with us

அரசியல்

சஜித்துடன் கைகோர்த்த எட்டு கட்சிகள் …!

Published

on

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 கட்சிகள் இணைந்துள்ளன.குறித்த கட்சிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று காலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்ற போதே மேற்படி கூட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வில், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி ஜயசேகரவின் தரப்பு உட்பட 8 கட்சிகள் பிரதான பங்காளிகளாக இணைந்துள்ளன.அதேபோன்று நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் எம்.பி.க்களும், சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *