Connect with us

உலகம்

சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  ஒருவர் கைது

Published

on

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை  இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பஹ்ரேனில் இருந்து இலங்கைக்கு வந்த குறித்த நபர் இன்று (04) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது அவரது பயணப்பையில் இருந்து 12,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 60 பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெறுமதி பதினெட்டு இலட்சம் ரூபா என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *