Connect with us

உள்நாட்டு செய்தி

சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை….!

Published

on

மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, நுவரெலியா மத்திய சந்தையில் ஒரு கிலோகிராம் நிறையுடைய கறிமிளகாய் – 750 ரூபா , கோவா- 350 ரூபா, கரட் – 400 ரூபா, லீக்ஸ் – 420 ரூபா, ராபு – 160 ரூபா, இலையுடன் பீட்ரூட் 400 ரூபா, இலையில்லா பீட்ரூட் 480 ரூபா, உருளைக் கிழங்கு – 460 ரூபா கத்தரிக்காய் – 360 ரூபா என விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை ஒரு கிலோகிராம் நிறை ஒன்றின் விலை – 450 ரூபா, ப்ரக்கோலி – 3900 ரூபா, கோலிப்ளவர் – 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என விவசாயிகள் குறிப்பிட்டதுடன் குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *