உள்நாட்டு செய்தி
சடுதியாக அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை….!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/01/1675134308-veg-2.jpg)
மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நுவரெலியா மத்திய சந்தையில் ஒரு கிலோகிராம் நிறையுடைய கறிமிளகாய் – 750 ரூபா , கோவா- 350 ரூபா, கரட் – 400 ரூபா, லீக்ஸ் – 420 ரூபா, ராபு – 160 ரூபா, இலையுடன் பீட்ரூட் 400 ரூபா, இலையில்லா பீட்ரூட் 480 ரூபா, உருளைக் கிழங்கு – 460 ரூபா கத்தரிக்காய் – 360 ரூபா என விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, உயர் தர சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லி இலை ஒரு கிலோகிராம் நிறை ஒன்றின் விலை – 450 ரூபா, ப்ரக்கோலி – 3900 ரூபா, கோலிப்ளவர் – 1600 ரூபா என்றவாறு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மழையால் பயிர்கள் அழிந்து வருவதே இந்த விலை உயர்விற்கு காரணம் என விவசாயிகள் குறிப்பிட்டதுடன் குறைந்த விலையில் காய்கறிகள் கொண்டு வந்தாலும், பொருளாதார மையங்களில் உரிய விலை கிடைப்பதில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.