Connect with us

உள்நாட்டு செய்தி

மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை…!

Published

on

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கி.மீற்றர் வரை அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த கடற்பரப்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களையும் கடல்சார் ஊழியர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *