Connect with us

உள்நாட்டு செய்தி

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனு ஒத்திவைப்பு

Published

on

ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்குமீதான விசாரணை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *