உள்நாட்டு செய்தி
குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன…!
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/05/urup.jpg)
20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், வடமேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் சற்று முன்னர் ஆரம்பமானது.