Connect with us

முக்கிய செய்தி

உலக வங்கியின் இலங்கை, நேபாளம், மாலைத்தீவுக்கான புதிய பணிப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் இலங்கை,நேபாளம், மாலைத்தீவுக்கான புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் (David Sislen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிஸ்லேனுக்கு முன்னதாக உலக வங்கி வதிவிடப் பணிப்பாளராக பரீஸ் ஹதாத் – சர்வோஸ் (Faris Hadad-Zervos) பணியாற்றினார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உப தலைவர் மார்டின் ரயிசர், உலக வங்கியின் தெற்காசியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான முகாமையாளர் கியோ கந்தா மற்றும் பொருளாதர அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர்.