Connect with us

உலகம்

டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

Published

on

டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பலத்த மழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அங்கு தீயணைப்புப் படையினர், பொலிஸார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்தின் மேற்கூரையை சரி செய்யும் வரை, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிலையம் அறிவித்துள்ளது. இவ்விமான நிலையத்துக்குக் குறைந்தளவிலான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்த விபத்து காரணமாக, பல பயணிகளது வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *