Connect with us

உள்நாட்டு செய்தி

உனவடுன கடற்கரையில் நீராட சென்ற ஒருவர் பலி..!

Published

on

 

உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வெளிநாட்டு பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடலில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அசேலபுர பிரதேசத்தில் நீரோடை ஒன்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் நேற்று (25) இரவு நீராடச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வெலிகந்த, அசேலபுர பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *