Connect with us

உள்நாட்டு செய்தி

10,000 பாடசாலைகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று இயங்கவில்லை….!

Published

on

சம்பள கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் , அதிபர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக 10,026 அரச பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைகள், விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் 30 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர் வேலைநிறுத்தத்தால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டிய ஜோசப் ஸ்டாலின், தமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இதேவேளை, சம்பள முரண்பாடுகள் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களினால் கொழும்பில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு எதிரே ஒல்கொட் மாவத்தை மற்றும் லோட்டஸ் வீதிக்கு அருகில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *