Connect with us

வானிலை

வானிலை அறிவிப்பு….!

Published

on

  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலைமட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும்காலி – அடிக்கடி மழை பெய்யும்யாழ்ப்பாணம் – சிறிதளவில் மழை பெய்யும்கண்டி – அடிக்கடி மழை பெய்யும்நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும்இரத்தினபுரி – அவ்வப்போது மழை பெய்யும்திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலைமன்னார் – சிறிதளவில் மழை பெய்யும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *