Connect with us

முக்கிய செய்தி

வவுனியாவில் பதிவாகிய நில அதிர்வு..!

Published

on

வவுனியா மதவாச்சி பகுதிகளில் 2.3 ரிக்ச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நில அதிர்வு நேற்றிரவு 11 மணியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் நேற்றிரவு சிறு அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன்,2 முதல் 3 நிமிடங்களுக்கு இவ்வாறு நில அதிர்வு நீடித்ததாக அந்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *