Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்தது…!

Published

on

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை 100,000இற்கும் மேல் குறைவடைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இறப்பு எண்ணிக்கை 35,000ஆக அதிகரித்துள்ளது.2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர்,ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000ஆக குறைவடைந்துள்ளது.இதற்கிடையில் ஆண்டு இறப்புகள் 2017இல் 146,000இலிருந்து 2023இல் 181,000ஆக அதிகரித்திருந்தன.

திருமணமான பல தம்பதிகள் கருவுற்ற காலத்தில் இலங்கையையை விட்டு வெளியேறியதே பிறப்புகள் குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும்,மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *