Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டின் தற்போதைய வனப்பரப்பளவு 29 %குறைவடைவு

Published

on

காட்டுத் தீ, வனப் பிரதேசங்களுக்குள் அத்துமீறிய சட்டவிரோத மனிதச் செயற்பாடுகள் உள்ளிட்ட காரணிகளினால் வனப்பரப்பளவு குறைவடைந்துள்ளதாக வனவளப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

8 மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் வனப்பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.இதற்காக வனப் பகுதிகள் அழிவடைந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் 2030ஆம் ஆண்டிற்குள் வனப்பரப்பளவை 32 சதவீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வனவளப் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *