Connect with us

முக்கிய செய்தி

பொசன் பண்டிகையை முன்னிட்டு 12 பாடசாலைகளுக்கு விடுமுறை

Published

on

பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகளுக்கு 19 ஆம் திகதி பாடசாலை நிறைவடையும் நேரத்தின் பின்னர் விடுமுறை விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம், வலசிங்ஹ ஹரிஸ்சந்த்ர வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், சாஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயம், தேவநம்பிய திஸ்ஸ வித்தியாலயம், நிவந்தகச்சேத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், மிஹிந்தலை வலயத்தின் மிஹிந்தலை மகா வித்தியாலயம், கம்மலக்குளம வித்தியாலயம், பத்திராஜ தென்னகோன் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கும், தந்திரிமலை வலயத்தின் விமலஞான வித்தியாலயத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.பொசன் பண்டிகைக் காலத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸாருக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்த பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதால், இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *