Connect with us

உலகம்

குவைத்தில் இன்று காலை,கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழப்பு..!

Published

on

குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் – Mangaf District இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,

குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீ பரவலுக்கான காரணம் குறித்த ஆதாரங்களையும் உயிரிழந்தவர்கள் பாதிக்க பட்டவர்களின் விபரங்களை அதிகாரிகள் தேடி வருவதாகவும்,

உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் அதிகாரி மேஜர் ஜெனரல் ஈத் அல் ஓவெய்ஹானை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை ஐந்து இந்தியர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *