Connect with us

உள்நாட்டு செய்தி

மின்சாரம் தாக்கி மாணவி பலி…!

Published

on

மின் தையல் இயந்திரத்தை இயக்கிய 17 வயது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது பாட்டி உடல் நலக்குறைவால் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.தையல் இயந்திரத்தின் மோட்டர் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்கை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளக் பொயிண்டுடன் இணைக்க மாணவி முயற்சித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ திடீர் மரண விசாரணை அதிகாரி அஜித் விஜேசிங்க விசாரணைளை மேற்கொண்டுள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த நிஷானி பியுமிகாவின் தந்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *