Connect with us

உள்நாட்டு செய்தி

சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த வைத்தியசாலையில் அனுமதி….!

Published

on

சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் எம்.கே.சமிந்த அல்லது “குகுல் சமிந்த” அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைதிகள் குழு ஒன்றின் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெலிஓயா ஹன்சவில கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர், கைதிகள் குழு ஒன்றின் தாக்குதலில் காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறுமியை தாக்கிய நபர் கடந்த 5 ஆம் திகதி அதிகாலை வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த தாக்குதலை சந்தேகநபரின் மூத்த மகன் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *