Connect with us

உள்நாட்டு செய்தி

பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக ரோஹித அபேகுணவர்தன

Published

on

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஏற்பாட்டாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (07) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழு , அரசியல் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் ​மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொழும்பு விஜேராமையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கூட்டத்தில் கலந்துரையாடியதாக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.அவர் மற்றுமொரு கட்சியின் தவிசாளராக பதவியேற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளும் அனுமதியும் நிறைவேற்றுக்குழு மற்றும் அரசியல் சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக சாகல காரியவசம் தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *