Connect with us

உள்நாட்டு செய்தி

தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்

Published

on

 தாம் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று (06) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கலந்துரையாடலின் போது தங்களின் ​யோசனைகளை முன்வைத்ததாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து பதில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகளுக்கு 14 நாட்களிலும், உரித்து வேலைத்திட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திலும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத பட்சத்தில், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *