Connect with us

முக்கிய செய்தி

குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபர் கைது…!

Published

on


 மணலாறு பகுதியில் 4 வயது குழந்தை மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த 4 வயது குழந்தையை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில் குறித்த குழந்தை மீது தாக்குதல் நடத்திய ஆண் உட்பட மூன்று பேர் புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மணலாறு பொலிஸார் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த சிறுவனைத் தாக்கிய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி 45 வயதான பிரதான சந்தேகநபரும், 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தாக்குதலுக்கு இலக்கான 4 வயதான குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மணலாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *