Connect with us

முக்கிய செய்தி

மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

Published

on

புத்தளத்தில் தலைமுடி உலர்த்தி (Hair Dryer) மூலம் தலைமுடியை உலர வைத்த போது மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (30) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்புத்தளம், 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 17 வயதுடைய துவான் சலீம் முஹம்மது சஹ்ரான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் நேற்றைய தினம் தனது வீட்டில் குளித்து விட்டு தலைமுடி உலர்த்தி மூலம் அவரது தலைமுடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.எனினும் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதேவேளை உயிரிழந்த மாணவன் இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *