முக்கிய செய்தி
மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையுத்தரவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29.05.2024) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே, தடையுத்தரவை நீடிக்குமாறு நீதிபதி சந்துன் விதான உத்தரவிட்டுள்ளார்.