Connect with us

உலகம்

பப்புவா நியூ கினியில் நிலச்சரிவு – இதுவரையில் 2,000 பேர் பலி!

Published

on

பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுவரையில் 150 வீடுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பப்புவா நியூ கினியின் வடக்கேயுள்ள எங்கா பிராந்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு 100 பேர் உயிரிழந்ததாக முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது.இந்தநிலையில், நேற்றைய தினம் குறித்த எண்ணிக்கை 670ஆக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.எனினும் இன்று குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஆக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நிலச்சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.அத்துடன், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4,000 பேர் வரை வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.