Connect with us

உள்நாட்டு செய்தி

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!

Published

on

ஹினிதும, கும்புரேகொட பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.

ஹினிதும, கும்புரேகொட, ஹபரகடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அயல் வீட்டிலிருந்து மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளுவதற்காக,

அங்குச் சென்றிருந்த போது இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர் மெதகம வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *