Connect with us

உள்நாட்டு செய்தி

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் அதிபர் கைது

Published

on

  எஹலியகொட பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவர் 30,000 ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பாடசாலையில் மதிய நேர உணவை வழங்குவதற்காக பதிவு செய்திருந்த நபரொருவரிடம் இருந்தே குறித்த அதிபர் இலஞ்சம் பெற முயற்சித்துள்ளார்.மதிய நேர உணவு வழங்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமாயின் தமக்கு பணம் வழங்குமாறு சந்தேகநபரான பாடசாலை அதிபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து சந்தேகநபர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்இதன்படி, அவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *