Connect with us

உள்நாட்டு செய்தி

மாத்தளை மதுபானசாலைகளுக்கு இன்று முதல் பூட்டு: கலால் திணைக்களம் அறிவிப்பு..!

Published

on

மாத்தளையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

2024ம் ஆண்டுக்கான தேசிய வெசாக் தின நிகழ்வு இம்முறை மாத்தளையில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தளையில் இன்று செவ்வாய்க்கிழமை (21) முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும் கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என கலால்வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *