Connect with us

உள்நாட்டு செய்தி

பரீட்சை எழுதிவிட்டு காணாமல் போன கினிகத்தேனை மாணவிகள் இருவரும் கொழும்பில் மீட்பு..!

Published

on

கினிகத்தேனை பிரதேசத்தில் சாதாரணத் தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு மாணவிகள் காணாமல் போயிருந்த நிலையில்,

உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து நேற்று (15) இரவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகக் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவிகள் இருவரும் கடந்த 14 ஆம் திகதியன்று சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக் கினிகத்தேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் பரீட்சைக்குத் தோற்றாமல் காணாமல் போயிருந்துள்ளனர்.

இதனையடுத்து இரு மாணவிகளின் உறவினர்களும் இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகள் இருவரும் வேலை வாய்ப்புத் தேடி கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ள நிலையில்,

இருவரும் கடுவலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *