உள்நாட்டு செய்தி
டினியா தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு…!

நாட்டில் இளைஞர்களிடையே டினியா தோல் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நோய் நிலைமையானது இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் ஏற்படுவதாகவும், பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க கூறியுள்ளார்.
மேலும், தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.