Connect with us

உள்நாட்டு செய்தி

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை விட்டுவிட்டு தப்பியோட்டம்.!

Published

on

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி, குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தனது தாயுடன் பிரசவத்திற்காக நேற்று மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நேற்று இரவு குழந்தையை பிரசவித்த சிறுமி குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு சிறுமியும் அவரின் தாயும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *