Connect with us

உலகம்

பிரேசிலில் வெள்ளம் – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

Published

on

வெள்ளம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.அத்தோடு, இதுவரையில் சுமார் 74 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளம் காரணமாக காணாமல் போனவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.சீரற்ற காலநிலை காரணமாக பிரேசிலின் போர்ட்டோ அலெக்ரேவில் உள்ள சர்வதேச விமான நிலையம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.