Connect with us

உள்நாட்டு செய்தி

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்று திறக்கப்படும்

Published

on

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்று(04) திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை. சில பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

இதற்கிணங்க, கொழும்பு, காலி, குருநாகல், நுவரெலியா, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட அலுவலகங்களை இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *