Connect with us

உள்நாட்டு செய்தி

பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ்  நிலையம் செல்லத் தேவையில்லை!

Published

on

  ஒன்லைன் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தி, முறைப்பாடு செய்யும் நபர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக பொலிஸ் குழுக்களை அனுப்பி முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதனால் இனிமேல் பொதுமக்கள் முதற்கட்ட புகார் கொடுக்க பொலிஸ் நிலையம் செல்ல வேண்டியதில்லை.இந்த புகாரை “ஐஜிபியிடம் சொல்லுங்கள்” (tell IGP ) என்ற இணையதளம் மூலமாக பொலிஸ் நிலையம் நிலையம் மற்றும் அப்பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளர், சிரேஷ்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோரில் ஒருவருக்கு இதன் நகலை அனுப்புவதற்கான அமைப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுபொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இந்த புதிய முறை ஆரம்பிக்கப்பட உள்ளது. 22 போலீஸ் நிலையங்களில் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.முதல் முறைப்பாடு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஸ்டேஷன் கமாண்டர் உத்தரவின் பேரில் பொலிஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *