Connect with us

வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை

Published

on

  நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் நிலவுவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.அத்துடன், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்றும் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *