Connect with us

முக்கிய செய்தி

தியத்தலாவ பகுதியில் கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Published

on

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களுள் 8 வயதுடைய சிறுமி ஒருவருடன் பார்வையாளர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஏனைய நால்வரும் குறித்த பந்தயப் போட்டியில் கடமையாற்றிய அதிகாரிகள் என்பதுடன், சிறுமியைத் தவிர உயிரிழந்த ஏனைய அனைவரும் ஆண்கள் ஆவர்.

தியத்தலாவ கார் பந்தய போட்டியின் போது இடம்பெற்ற  விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி,  6 பேர் விபத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உயிரிழந்தவர்களுள் ஒரு குழந்தையும் நான்கு டிராக் மார்ஷல்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தியத்தலாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். 

மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த பகுதியில் இடம்பெற்ற  Fox Hill Super Cross 2024  காரோட்ட பந்தய போட்டியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

போட்டியில் பங்குபற்றிய பந்தய கார் ஒன்று  பந்தய பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதுண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *