Connect with us

உள்நாட்டு செய்தி

மோட்டார் சைக்கிள் விபத்து – மாணவன் பலி !

Published

on

  ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.இவ் விபத்து நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகமவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.16 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *