Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று !

Published

on

 

கொரோனா தொற்றுக்குள்ளான பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸிலிருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

62 வயதான குறித்த பெண் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, அராலியில் தங்கியிருந்த நிலையில், காய்ச்சலினால் இரண்டு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்றதாகவும், இந்த நிலையில், குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உயிரிழப்பிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *