Connect with us

உள்நாட்டு செய்தி

வர்த்தகர்கள் கோழி இறைச்சியின் விலை குறித்து குற்றச்சாட்டு!

Published

on

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையை வர்த்தகர்கள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.அத்துடன், இவ்வாறான பின்னணியில் சந்தையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்து.இருந்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தற்போது சந்தையில், ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக ஒரு கிலோகிராம் கோழியிறைச்சி 1,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.இதேவேளை, முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னதாக சந்தையில் உள்நாட்டு முட்டை ஒன்று 38 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.பண்டிகைக் காலத்தையடுத்து முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், முட்டையின் விலை மீண்டும் அதிகரித்தால், இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யப் போவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *