Connect with us

உள்நாட்டு செய்தி

நீர்தாங்கி கவிழ்ந்து சிறுமி பலி !  

Published

on

 

அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் பிளாஸ்டிக் நீர்தாங்கி கவிழ்ந்து வீழ்ந்து  சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நீர்தாங்கிக்கு கீழே இருந்த தண்ணீர் குழாயில் நீராடி கொண்டிருந்த போது சிறுமி மீது நீர் தாங்கி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ருஹுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த 03 வயதும் 07 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *