Connect with us

முக்கிய செய்தி

A/L பெறுபேறுகள் தொடர்பில் அறிவிப்பு !

Published

on

  

 

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள் சரிபார்த்தல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளும் தொடந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி 04ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன் 342,883 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது