Connect with us

உள்நாட்டு செய்தி

விரைவில் ரயில் பயணிகளுக்கு இ-டிக்கெட்

Published

on

இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் பயணங்களுக்கு “இ-டிக்கெட்” முறையை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார தெரிவித்துள்ளார்..

19 மில்லியன் டொலர் செலவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாக நடைமுறைப்படுத்தப்படாத இத்திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முதற்கட்ட நடவடிக்கையாக, அடுத்த 5 மாதங்களுக்குள் ரயில் டிக்கெட்டுகளுக்கு ஸ்ரீ ஏ குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *